பாவ சந்தோஷங்களும் பரலோக சந்தோஷங்களும்
நாம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பின்பற்றும்போது, எப்போதும் சிலுவையின் சுமையும் பாடுகளும் உண்டு
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் வாழ விரும்புகிற யாவரும் துன்பப்படுவார்கள்" என்று எழுதியிருப்பதும், இயேசு "ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" என்று சொன்னது போல, பரலோக ராஜ்யத்தின் மகிமைக்காக வாழும் அனைவரின் வாழ்விலும் சிறு சிறு துன்பம் தொடர்வது நிச்சயமாகும்.
பரலோக ராஜ்யத்தின் சந்தோஷங்களைத் தேர்ந்தெடுக்கிறவர்களால் பிரசங்கிக்கப்படும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் சுவிசேஷம் என்ன?
ஏசாவும் யூதாஸ் காரியோத்தும் மாம்சத்தின்படி வாழ்ந்து, பாவத்தின் சந்தோஷங்களைப் பின்தொடர்ந்து, இறுதியில் பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை இழந்தனர். ஆனால், மோசே, யாக்கோபு, தானியேல் மற்றும் அவனுடைய மூன்று நண்பர்களோ பரலோகத்தின் சந்தோஷங்களை மேலானதாக கருதி, கஷ்டங்களை ஜெயித்தார்கள். அதுபோலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்களும், தேவன் கட்டளையிட்டபடியே, புதிய உடன்படிக்கையின் ஓய்வுநாள் மற்றும் பஸ்காவின் ஆசீர்வாதங்களைப் பிரசங்கிப்பதில் தங்களை அர்ப்பணித்து, தேவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரலோகத்தின் சந்தோஷங்களின்மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
எபிரெயர் 11:24–26
பார்த்த எண்ணிக்கை175
#விசுவாசம்
#நன்றி