நம் நித்திய வீடான, நம்முடைய தாய்
சால்மன் மீனின் வாழ்க்கையின் மூலம் மனிதகுலத்திற்கு தேவன் கற்பித்த மிக முக்கியமான பாடம் என்ன?
சால்மன் மீன்கள் கடலில் வாழ்ந்து, பின்பு முட்டையிடுவதற்காக தாங்கள் பிறந்த இடத்திற்கே திரும்புகின்றன. அந்தச் செயல்பாட்டில், சால்மன் மீன் சாப்பிடாமல், தன் சேமித்த ஆற்றலைப் பயன்படுத்தி வலியைத் தாங்குவது போல, நாமும் இவ்வுலகில் கற்றுக்கொண்ட கெட்ட பழக்கவழக்கங்கள் அனைத்தையும் விட்டு, மறுபடியும் பிறக்கும் வேதனையை மேற்கொண்டு, தந்தை தாயும் வாசம்பண்ணும் நமது நித்திய பரலோக வீட்டிற்குத் திரும்ப பிரயாசப்பட வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள தேவனுடைய சபை உறுப்பினர்கள் “தாயின் அன்பான மொழி” என்பதை பயிற்சி செய்கிறார்கள்
வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே, சகல ஜாதிகளும் பரலோக எருசலேம் தாயின் கரங்களுக்குள் பறந்துவரும் இந்நேரத்தில், தேவனுடைய சபை உறுப்பினர்கள் தாயின் போதனைகளின்படி எப்போதும் “தாயின் அன்பான மொழி” பயிற்சிசெய்து, தங்கள் நற்கிரியைகளின் மூலம் பரலோக எருசலேம் தாயின் மகிமையை உலகம் முழுவதும் வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:2
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
ஏசாயா 60:1–3
பார்த்த எண்ணிக்கை102
#தாய்
#தீர்க்கதரிசனம்
#விசுவாசம்