பஸ்காவும் தேவனுடைய குடும்பமும்
தேவனுடைய குடும்பம் மட்டுமே ஆசரிக்கக்கூடிய
நித்திய ஜீவனின் சத்தியமான பஸ்கா.
பரலோக தூதர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு
பரலோகத்தில் பாவம் செய்து அவர்கள் இந்த
பூமிக்குத் தள்ளப்பட்டனர் என்று வேதாகமம்
சாட்சியளிக்கிறது, இதுதான் மனுகுலம் கதை.
மனுகுலத்திற்கு பாவ மன்னிப்பைக் கொடுத்து,
அவர்கள் தங்கள் ஆவிக்குரிய வீடான
பரலோக ராஜ்யம் திரும்பவதற்காக கிறிஸ்து
அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன்
இந்த பூமிக்கு வந்து, புதிய உடன்படிக்கையின்
பஸ்காவை ஸ்தாபித்தார்கள்.
பூமியில் உள்ளவை பரலோகத்தில் உள்ளவற்றின்
சாயலும் நிழலும் என்று தேவன் ஏன் சொன்னார்?
பூமிக்குரிய குடும்பமானது இரத்தத்தால் தொடர்புடையது போல,
பரலோக குடும்பமும் இரத்தத்தால் தொடர்புடையது.
தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனின்
பிள்ளைகளாக பரலோக குடும்பம் உறுப்பினர்களாக மாற,
மனுகுலம் தேவனுடைய மாம்சத்திலும் இரத்தத்திலும்
பங்குபெறும்படிக்கு பஸ்கா அப்பமத்தை புசித்து,
பஸ்கா திராட்சைரசத்தை பானம்பண்ண வேண்டும்.
இன்று, 175 நாடுகளில் உள்ள தேவனுடைய
சபையின் உறுப்பினர்கள் பஸ்காவை
ஒரே மனதுடன் ஆசரிக்கிறார்கள்.
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின்
சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது;
எபிரெயர் 8:5
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத
அப்பப்பண்டிகை நாள் வந்தது.
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி,
அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து:
இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய
சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி
இதைச் செய்யுங்கள் என்றார்.
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம்
உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய
இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
லூக்கா 22:7-20
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும்
பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே
ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
எபேசியர் 2:19
பார்த்த எண்ணிக்கை138