தேவனுடைய வல்லமையினால், இஸ்ரவேலர்கள்
எகிப்திலே 430 வருடகால அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு
கானானை நோக்கிச் சென்றனர்.
இருப்பினும், இஸ்ரவேலர்கள் தங்களை விடுவித்த
தேவனுடைய கிருபையை மறந்துவிட்டார்கள்.
"ஏன் எங்களை எகிப்திலிருந்து இந்த வனாந்திரத்திற்கு கொண்டு வந்தீர்?"
குறைகூறின ஜனங்கள் விஷப்பாம்புகளினால் கடிக்கப்பட்டு இறந்தனர். (எண் 21:6)
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். (எண் 21:8)
அப்படியானால், வெண்கலச் சர்ப்பம்தான் அவர்களை காப்பாற்றியதா?
இல்லை. “கடிக்கப்பட்டவன் எவனோ
அவன் அதைப் நோக்கிப்பார்த்தால் பிழைப்பான்¡± என்ற
வார்த்தைகளால் தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
இருந்தாலும், இஸ்ரவேலர்கள், அதற்கு மர்மமான சக்தி இருப்பதாக நினைத்து நூற்றுக்கணக்கான வருடங்களாக வழிபட்டு வந்தனர்.
எசேக்கியா ராஜா வெண்கலச் சர்ப்பத்தை துண்டு துண்டாக உடைத்தபோது,
தேவன் அவரைப் பாராட்டி அவர் போகுமிடமெங்கும் வெற்றியைத் தந்தார். (2 இரா 18:3-7)
வெண்கலச் சர்ப்பத்தை உடைத்த போட்ட எசேக்கியாவை
தேவன் ஏன் பாராட்டினார்?
ஏனெனில், விக்கிரகத்தை வழிபடுபவர்கள் அழிக்கப்படுவார்கள்.
வெண்கலச் சார்ப்பத்தை வழிபட்ட வரலாறானது
சிலுவை அமைக்கும் சபைகள் அழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனமாகும்.
“(வெண்கலச்) சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல
மனுஷகுமாரனும். . .உயர்த்தப்பட வேண்டும்" யோவான் 3:14-15
சிலுவை அல்ல, இயேசுவே நம்மை இரட்சித்தார். (1 பேதுரு 1:18-19)
இருப்பினும், இஸ்ரவேலர்கள் வெண்கலச் சர்ப்பத்தை வழிப்பட்டதைப் போலவே
இன்றைய சபைகளும் சிலுவையை வழிபட்டு வருகின்றனர்.
வெண்கலச் சர்ப்பமானது வெறும் வெண்கலத் துண்டாயிருப்பது போல
சிலுவையும் வெறும் மரத் துண்டு ஆகும்.
சிலுவையை அமைக்கும் சபைகள் அழிக்கப்படும். (உபா 27:15)
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படமாலும்,
அவளுக்கு நேரிடம் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு
அவளைவிட்டு வெளியே வாருங்கள்” வெளி 18:4
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி, தேவனுடைய சபை வெண்கல சர்ப்பத்தின் வரலாறானது சிலுவையை வழிபடுவதற்கான தீர்க்கத்தரிசனம் என்று ஜனங்கள் அறியும்படி செய்கின்றனர். தாயாகிய தேவனும் பரிசுத்த ஆவி காலத்தின் இரட்சகரும் இருக்கிற சீயோனான தேவனுடைய சபைக்கு வாருங்கள். அதன் மூலம் கடைசி அழிவிலிருந்து தப்பித்து இரட்சிக்கப்படுவீர்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை