நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம்? மரணத்திற்கு பிறகு எங்கே போகிறோம்?
அநேக தத்துவ ஞானிகளும், இறையியல் ஞானிகளும், விஞ்ஞானிகளும்
பல நூற்றாண்டுகளாக வாழ்வின் அர்த்தத்தை தேடிய பிறகும்,
அவர்களால் தங்கள் கருத்துக்கே முரண்பாடில்லாத
ஒரு தத்துவத்தை சொல்ல முடியவில்லை.
மக்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை அறியாமலே, தங்கள் வேலைகளுடன்
கட்டப்பட்டவர்களாய் அலைந்து திரிந்து, இறுதியில் மரணத்தை சந்தின்றனர்.
காற்று வீசுகையில் உதிரும் இலைகளை போல,
நம் வாழ்க்கையும் வெறும் கனவாகவே கடந்துவிடுகிறது.
ஆனால், நம் வாழ்க்கையில் முக்கியமான
ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது.
மரணம் என்றால்
பரலோகத்திற்கு “திரும்பி போவது” என்று
வேதாகமம் சொல்கிறது. (பிரசங்கி 12:7)
”திரும்பி போவது” என்றால் முன்பு இருந்த
இடத்திற்கே திரும்புவது என்று அர்த்தம்.
தேவன் பூமியை உண்டாக்கும் முன்னே,
நீங்கள் பரலோகத்தில் இருந்தீர்கள்.
”யோபுவே! நான் பூமியை
உண்டாக்கும்போது நீ எங்கே இருந்தாய்?
நீ பரலோகத்தில் இருந்தாய்,
அநேக வருடங்கள் வாழ்ந்தாய்!”யோபு 38:1-21
யோபு பூமியில் பிறக்கும் முன்னே,
பரலோகத்தில் இருந்தார் என்று
தேவன் அவருக்கு கற்பித்தார்.
யோபுவை போலவே
நாமும் பூமியில் பிறக்கும் முன்னே
பரலோகத்தில் இருந்தோம்.
பூமியில் இருக்கும்போது,
நமது ஆவி, சிலகாலம் வாழும்
“கூடாரம்” தான் நம் சரீரமாகும். (2 கொரிந்தியர் 5:1)
அதனால்தான், இயேசுவால்
கற்பிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் மனுகுலத்தை
“அந்நியர்கள்” மற்றும் “பரதேசிகள்” என்று அழைத்தனர்.
நம்முடைய சொந்த தேசம் “பரலோகம்”
என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (எபிரெயர் 11:3)
நேர, இட, வேக வரைமுறை இல்லாத பரலோகத்தில்,
நாம் பாவம் செய்தோம்.
பூமிக்கு தள்ளப்பட்ட மனிதகுலம்
பரலோக நினைவுகளை இழந்து,
பாவத்தின் வலியினால் பெருமூச்சுவிட்டு,
அழிவுகளின் பயத்தினால் நடுங்கிக்கொண்டிருக்கிறது.
நம்முடைய அழகிய மகிமைமிக்க
வீட்டின் ஞாபகம் வரவில்லையா?
நம்முடைய மகிமைமிக்க பரலோக வீட்டிற்கு
திரும்பிபோக ஒரு வழியும் இல்லையா?
நாம் இதற்கான பதிலை கண்டுபித்தால் மட்டுமே,
நாம் திரும்பிபோக முடியும்.
2,000 வருடங்களுக்கு முன்,
இயேசு இந்த பூமிக்கு வந்து, நாம் பரலோகத்தில் செய்த
பாவத்திற்கு மன்னிப்பு பெறும் வழியை கற்பித்து,
பரலோகம் திரும்ப வழிகாட்டினார். (மத்தேயு 26:26)
இந்த காலத்தில், ஆவியும் மணவாட்டியும் தொலைந்த பஸ்காவை மீட்டுத்தந்து,
நம்முடைய நித்திய வீடான பரலோகத்திற்கு வழிநடத்துகின்றனர்.
மீட்டளிக்கப்பட்ட பஸ்காவை ஆசரித்து, நீங்கள் எப்பொழுதும் போக ஏங்கும்
நம் பரலோக வீட்டுக்கு திரும்புவீர்கள் என நம்புகிறேன்.
நம்முடைய நித்திய வீடான பரலோகத்திற்கு
உங்களை வரவேற்கிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை