எலியா மட்டுமே 850 கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிராக யுத்தம் செய்தார்; இளம் தாவீது மாபெரும் கோலியாத்தை தோற்கடித்தான்; கிதியோனின் 300 வீரர்களான 1,35,000 மீதியானியர்களின் சேனையோடு யுத்தம்பண்ணினார்; இஸ்ரவேலர்கள் 40 வருடங்கள் வனாந்தரத்தில் துன்பப்பட்டார்கள்; ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் துன்புறுத்தலையும் இரத்தசாட்சியையும் சந்தித்தபடியே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். இவர்கள் அனைவரும் துன்பங்களுக்கு மத்தியில் தங்கள் இருதயங்களை புடமிட்டுக்கொண்டு, தேவனால் விசுவாசத்தில் அங்கீகரிக்கப்பட்டு, இறுதியில் வெற்றியின் மகிமையைப் பெற்றார்கள்.
தம்முடைய பிள்ளைகள் துன்பப்படுவார்கள் என்றும் பிசாசினால் இடையூறு செய்யப்படுவார்கள் என்றும் தேவன் முன்னமே அறிந்திருந்தார். இருப்பினும், புடமிடுதலின் வாயிலாக, தமக்கான பயபக்தியையும், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, தீமையை வெறுத்து நன்மையைத் தொடரும் ஆவியையும் அவர்களில் வளர்த்த பின்பு, தம்முடைய சர்வவல்லமையினால் அவர்களுக்கு அற்புதங்களை நடப்பித்தார்.
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 17:3
அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, ஏசாயா 46:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை