பாவநிவிர்த்தி செய்யும்நாள் என்பது ஜனங்களுடைய எல்லா பாவங்களும் ஆசாரியர்களுடைய பாவங்களும் மன்னிக்கப்படுகிற மகத்தான ஒரு நாளாகும். இஸ்ரவேலர்கள் தேவனுடைய கிருபையை மறந்து, தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்கி விக்கிரக வழிபாடு செய்து பாவம் செய்தனர். அதனால்தான் தேவனால் முதல்தரம் கொடுக்கப்பட்ட பத்துக்கட்டளைகளை உடைத்துப்போட்டார். இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பினதினால் தேவன் அவர்களுக்கு இரண்டாம்தரம் பத்துக்கட்டளைகளை கொடுத்தார்; இந்த நாளே பாவநிவிர்த்தி செய்யும்நாளின் ஆரம்பமானது.
பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேலர்களின் எல்லா பாவங்களும் தற்காலிகமாக பாவநிவிர்த்தி செய்யும்நாள் வரை பரிசுத்த ஸ்தலத்தில் சுமந்தப்பட்டன. இன்று, நம்முடைய எல்லா பாவங்களையும் பரிசுத்த ஸ்தலத்தின் நிஜமாக இருக்கிற கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன்மீது சுமத்தப்படுகின்றன. பின்னர், பாவநிவிர்த்தி செய்யும்நாளில் நமது எல்லா பாவங்களும் பாவத்தின் பிறப்பிடமாக இருக்கிற சாத்தானிடம் செலுத்தப்படுகிறது. இறுதியாக சாத்தான் நரகத்தில் தண்டிக்கப்படுவதின் வாயிலாக நமது எல்லா பாவங்களும் மறைந்து போகும்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
லேவியராகமம் 23:26-27
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை