ஏதேன் தோட்டத்திலே, தேவன், “இதைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” என்று சொன்ன, நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும், அதனைப் புசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஜீவ விருட்சத்தின் கனியும் இருந்தன. இருந்தாலும், சர்ப்பத்தினால் ஆதாம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்ற தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமற் போனார்கள். விளைவாக. அதன்பின்னர் அவர்கள் ஜீவவிருட்சத்தைப் புசிக்க அனுமதிக்கப்படாமல் மரிக்க நேர்ந்தது.
ஜீவ விருட்சத்தின் நிஜம், நாம் இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணும் புது உடன்படிக்கையின் பஸ்கா ஆகும். மரணத்துக்குப் பாத்திரமான பாவமான, தடைசெய்யப்பட்ட கனியைப் புசித்த பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக, பரிசுத்த நாட்காட்டியின்படி, இரண்டாம் மாதத்தில் பஸ்காவை ஆசரிக்க, தேவன் நமக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறார்.
கி.பி 325ல் பஸ்கா அழிக்கப்பட்டு, ஜீவ விருட்சத்துக்குப்போம் வழி மீண்டும் அடைக்கப்பட்டது. தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தின் நிறுவனரான கிறிஸ்து அன்சாங்ஹோங், வேதாகம தீர்க்கதரிசனங்களின்படி, மீண்டும் அதன் வழியைத் திறந்திருக்கிறார்.
…பழமையான திராட்சரசம் நிறைந்த விருந்தாயிருக்கும்…. அவர் மரணத்தை
ஜெயமாக விழுங்குவார்… அக்காலத்திலே இதோ இவரே நம்முடைய தேவன் என்று சொல்லப்படும்… ஏசாயா 25: 6-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை