பரிசுத்த ஆவியின் காலத்தில், ஸ்திரீக்கும் அவளுடைய சந்ததிக்கும் மற்றும் சாத்தானுக்கும் அவனைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இடையே மாபெரும் ஆவிக்குரிய யுத்தம் நடக்கும் என்று தேவன் வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார். இரட்சிக்கப்படுகிறவர்களை தேவன் இரட்சிக்கப்படாதவர்களிடமிருந்து பிரிக்கும்போது, தாயாகிய தேவனான ஸ்திரீயின் பக்கம் நின்றால் மட்டுமே, மாபெரும் ஆவிக்குரிய யுத்தத்தில் வென்று இரட்சிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.
பூமிக்குரிய குடும்ப அமைப்பு மற்றும் ஏவாளின் சிருஷ்டிப்பின் செயல்முறையின் வாயிலாக தாயாகிய தேவன் இருக்கிறார் என்பதையும், ஸ்திரீயின் சந்ததியான தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், எருசலேம் தாயின் மகிமையை உலகிற்குப் பிரசங்கிக்க வேண்டும் என்பதையும் அன்சாங்ஹோங் தேவன் நமக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துகிறார்.
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது. . . வெளிப்படுத்தின விசேஷம் 12:17–18
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். ஏசாயா 62:6–7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை